(என்.ஜி.இராதகிருஷ்ணன்)
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை சென்று அடைந்துள்ளதாக நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள நேரப்படி அதிகாலை 5.55 மணிக்கு இலங்கையரான ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது.
ஜொஹான் பீரிஸின் எவரெஸ்ட் ஏறும் முதல் முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இவரது இரண்டாவது முயற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. அத்துடன் நேபாள எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையையும் ஜொஹான் பீரிஸ் பெற்றுள்ளார்.
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் இரண்டு அமெரிக்கர்கள், ஒரு தென்னாபிரிக்க பிரஜை, ஒரு கனடா பிரஜை உட்பட 13 பேர் கொண்ட குழு எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இலங்கையரான ஜொஹான் பீரிஸ் தற்போது தரை தளத்தில் உள்ள முகாம் நோக்கி இறங்கிக்கொண்டு இருப்பதாக தெரியவருகிறது.
உலகிலேயே அதி உயரமான மலையான எவரெஸ்ட் சிகரம் 8848 மீற்றர் உயரம் கொண்டதாகும்.
எவரெஸ்ட் சிகரம் நேபாள சீன எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM