(இராஜதுரை ஹஷான்)
தேசிய பாதுகாப்பிற்கும் நாட்டின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றும் வடமாகாண சபையினை கலைத்து, முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை கைதுசெய்ய நடவடிக்கை வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாண முதலமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தற்போது தெற்கில் உள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நினைவேந்தலின் போது நாட்டின் இறையாண்மைக்கு எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் சில கருத்துக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
அத்தோடு வடமாகாணம் தற்போது நாட்டின் பொது சட்டத்திற்கு முரணாகவே செயற்படுகின்றது என்ற விடயத்தினை ஜனாதிபதி அறியாமல் உள்ளாரா அல்லது விக்னேஸ்வரனின் கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை.
நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றும் வடமாகாண சபையினை கலைத்து, விக்னேஸ்வரனை கைதுசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM