மதிப்பிழந்த உயிர்த் தியா­கங்கள்: "மீண்டும் நாட்டைப் பாது­காக்க ஒன்றாக திர­ளுங்கள்"...!

Published By: J.G.Stephan

20 May, 2018 | 09:27 AM
image

விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில்  கைச்­சத்­திட்ட போது நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று  காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க  ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தெரி­வித்­துள்ளார்.

போர் முடி­வ­டைந்து 9 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் வெளி­யிட்­டுள்ள விஷேட அறிக்­கை­யி­லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக நான் பதவி ஏற்ற போது அதற்கு முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்கம் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. மறு­புறம் எமது உள்­நாட்டு பிரச்­சி­னைக்­காக சர்­வ­தேச தலை­யீ­டு­களும் மேலோங்கி இருந்­தன. எமது கடற்­ப­ரப்பில் மூன்றில் இரண்டு பகு­தி­யையும் நிலப்­ப­ரப்பில் மூன்றில் ஒன்­று­மாக பயங்­க­ர­வா­திகள் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தனர். 

உலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். அந்த பயங்­க­ர­வாத அமைப்­புக்கு எதி­ராக உலகில் வேறு எந்­த­வொரு நாட்­டுக்கும் இல்­லாத தைரி­யத்­துடன் போரிட்டோம். இந்தப் போராட்­டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்­தனர். இந்தப் போரில்­முப்­ப­டை­யினர் , பொலிஸார் மற்றும் சிவில் பாது­காப்பு பிரி­வினர் என பல்­லா­யிரம் பேர் உயிர்த்­தி­யாகம் செய்­தனர். இன்னும் பலர் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்­டனர். 

விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு முழு­மை­யாக அழிக்­கப்­பட்­டதன் பின்­னரே வடக்கு மற்றும் கிழக்­கிற்கு ஜன­நா­யகம் கிடைத்­தது. மேலும் நெடுஞ்­சா­லைகள் , வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் பாட­சா­லைகள் என அனைத்து இடங்­க­ளிலும் மரண ஓலங்­க­ளின்றி சமா­தானச் சூழல் தென்­னி­லங்­கையைப் போன்று வடக்கு கிழக்­கிற்கும் அதன் பின்­னரே கிடைக்­கப்­பெற்­றது. 

நாட்டு மக்­களின் சுதந்­திரம் வாழும் உரி­மையை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக உயிர்த் தியாகம் செய்த அனை­வரும் உயர்ந்த மானி­டர்­க­ளாவர். அவ்­வாறு அன்று இறுதிக் கட்டப் போரில் நாட்டு மக்­களின் சுதந்­தி­ரத்­திற்­காக பாடு­பட்ட இரா­ணு­வத்­தினர் போர்க் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டார்கள் எனக் குற்றம் சாட்­டு­கின்­றனர். இதை­விட மோச­மான செயல் யாதெனில் மக்­களின் வாக்­கு­களால் வந்த அர­சாங்­கமும் அதனை ஏற்றுக் கொண்­டுள்­ளமை மிகவும் மோச­மான காட்டிக் கொடுப்­பாகும். 

நாட்­டுக்கு எதி­ராக துரோ­கத்­தனம் செய்­ப­வர்­களும் இரா­ணு­வத்­தி­னரைக் காட்­டிக்­கொ­டுப்­ப­வர்­களும் ஒரு விட­யத்தை தெளி­வாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19