இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
சகோதர அயல்நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவினை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.
இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட இந்திய இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
புலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இருநாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM