வடக்கில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், மே 18ஆம் திகதி புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் புலிகளுக்கு ஆதரவாக வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறுமில்லை.
ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதேபோன்றே வடக்கில் யுத்தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை. அங்குள்ள மக்களும் எமது மக்களே.
வடக்கில் உள்ள தமிழர் , உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் புலிகளைப்போன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.
வடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை .பொதுமக்களும் இறந்ததுண்டு. அதுபோல் தான் இங்கும். வடக்கு மக்கள் இதனை அனுஷ்டிப்பதாலேயே உங்களுக்குப் பிரச்சினை இருப்பதாக தெரிகின்றது. இது தவறானதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM