பஞ்சாப் அணியின் துடுப்பாட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
பெங்களுர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி மிகமோசமான தோல்வியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அஸ்வின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஸ்வின் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எங்களது அணியின் துடுப்பாட்டம் பிரச்சினைக்குரியதாக உள்ளது . இந்த ஐ.பி.எல். போட்டிகளில் நாங்கள் மிகத்திறமையான, பலம் வாய்ந்த அணியாக நுழையவில்லை, ஆனால் முதல் கட்ட போட்டிகளில் நாங்கள் உதைத்து தள்ளிக்கொண்டு முன்னணிக்கு வந்தோம்.
மிகச்சரியாக தெரிவிப்பதென்றால் நாங்கள் இவ்வளவு சிறப்பாக விளையாடுவோம் என நினைத்துப்பார்க்கவில்லை.
இதேவேளை நாங்கள் மேலும் இரண்டு போட்டிகளில் வென்று இதனை விட மேலும் புள்ளிகளை பெற்றிருக்கலாம்.
பெங்களுர் அணிக்கு எதிரான தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ள அஸ்வின் ஐ.பி.எல்.லில் இலகுவான விடயம் என எதுவும் இல்லை எட்டு அணிகளுமே வலுவானவை எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM