பெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர்

Published By: Priyatharshan

14 May, 2018 | 05:09 AM
image

இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இக் காரணத்தினால் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை போக்கும் நோக்கில் மாற்று வழியை கையாண்டு வருமானம் ஈட்டவே பெற்றோலின் விலையை அதிகரித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக காரியாலத்திற்கான புதிய கட்டடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலரினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நட்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் சுமக்க முடியாது.

அத்துடன் சவுதி அரேபியா எரிப்பொருளின் விலையை 80 டொலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியிடுகின்றன. 

எவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறைவடையும் என நம்புகின்றோம். அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு நானும் ஜனாதிபதியும்  இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.

2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்தது. இதன்படி 41 டொலரினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்பிரகாரம் உலக சந்தையின் விலையேற்றத்திற்கு ஏற்ப பெற்றோலிய கூட்டுதாபனம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை கடந்த வியாழக்கிழமை முதல் அதிகரித்தது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43