அரசாங்கத்தை விமர்சித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் தயாசிறி

Published By: Priyatharshan

11 May, 2018 | 12:06 PM
image

தேசிய அரசாங்கத்தின் பயணமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது. அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சம உரிமைகள் இருக்கும் எனவும் வேலைத்திட்டங்கள் சமமாக முன்னெடுக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

எனினும் சுதந்திரக் கட்சியை புறக்கணித்தே ஐ.தே.க.வினர் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்கினர்.

நாம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாத காரணத்தினாலேய அதனை விமர்சிக்க ஆரம்பித்தோம். அத்துடன் மத்திய ஊழல், பொருளாதார செயற்பாடுகளில் இலங்கைக்கு பொருந்தாத நகர்வுகள் என்பவற்றை கருத்தில் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம். 

தற்போது தேசிய அரசாங்கத்தில் 23 சு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களளுடன் நாம் முரண்படவில்லை, தேசிய அரசாங்கமானது 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பனர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள்.

மேற்கு நாடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுக்கொள்ளவே இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02