மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் காணப்படும் 1வது இடமாக பிரகடணப்படுத்தப்பட்ட 168சீ நாவற்குடா கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 168சீ நாவற்குடா கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.
இங்கு கிணறுகள், மலசல கூடங்கள், நீர் தேங்கி நிற்கும் காணிகள் என டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு அபேட் எனும் கிருமி நாசினிகளும் போடப்பட்டதுடன், பாவிக்க முடியுதாக மல கூடங்கள், கிணறுகளும் மண்ணினால் மூடப்பட்டது.
இந்நடவடிக்கையை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம், காத்தான்குடி பொலிஸ் நிலையம், மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM