"ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று அறிவித்ததோடு ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இருப்பினும் இதை சற்றும் பொருட்படுத்தாத ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி,
"ஈரான் யுரேனியம் செறிவூட்டலை எந்த வரம்பும் இன்றி தொடரும், ஆனால் தற்போது அதை செய்வதை தவிர்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
பதிலளித்த ட்ரம்ப்,
“ஈரான் அணு ஆயுத சோதனையை தொடங்கக்கூடாது என நான் அந்நாட்டுக்கு அறிவுறுத்துவேன். அறிவுறுத்தியும் அவர்கள் அணு ஆயுத சோதனையை தொடரும் பட்சத்தில் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM