திருமணத்திற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் முதலையால் கடியுண்டு கையை இழந்த மணமகளை வைத்தியசாலையிலிருந்த தேவாலயத்தில் திருமணம் செய்த சம்பவம் சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.
மணமகளான ஸனேலி நட்லோவு சாம்பெஸி ஆற்றில் தனது வருங்காலத் துணையான ஜமி பொக்ஸுடன் படகில் சவாரி செய்து கொண்டிருந்த போது முதலையொன்று அவரைத் தாக்கி அவரது கரமொன்றை வாயால் கௌவியுள்ளது.
இதனையடுத்து முதலையால் கடியுண்டு கை கடும் சேதத்துக்குள்ளான நிலையில் ஸனேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மோசமாக சேதமடைந்த கைப் பகுதி வைத்தியர்களால் வெட்டித் துண்டிக்கப்பட்டது.
குறித்த இருவரும் கடந்த சனிக்கிழமை விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் ஸனேலிக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தால் அவர்களது திருமணம் சிம்பாப்வேயின் இரண்டாவது மிகப் பெரிய நகரான புலாவயோவிலுள்ள மற்றர் டெயி வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM