அமெரிக்க நியூயோர்க் பிராந்திய சட்டமா அதிபர் எரிக் ஸ்னெய்டர்மான் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் உட்பட 4 பெண்கள் அவருக்கு எதிராக தாக்குதல் குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரும் நடிகையும் செயற்பாட்டாளருமான தான்யா செல்வரட்ணம், அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிசெல்லி மான்னிங் பாரிஷ் மற்றும் எரிக் ஸ்னெய்டர்மானின் முன்னாள் காதலி ஒருவர், முன்னணி சட்டத்தரணியொருவர் ஆகியோரே மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 4 பெண்களுமாவர்.
அவர்களில் இருவர் எரிக்கின் முன்னாள் காதலிகள் என நியூயோர்க்கர் சஞ்சிகை தெரிவிக்கிறது.
தான்யா மேற்படி குற்றச்சாட்டு தொடர் பில் தெரிவிக்கையில்,
எரிக் தன்னைப் பின் தொடர்ந்து தனது தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கப் போவதாக எச்சரித்திருந்ததாகவும் தான் அவருடனான உறவை முறித்துக் கொள்ளும் பட்சத்தில் தன்னைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் கூறினார்.
எரிக் தன்னை "பழுப்பு நிற அடிமை" என அழைத்ததாகவும் சில சமயங்களில் அவர் தன்னை "எஜமானர்" என அழைக்க தனக்கு வற்புறுத்தியதாகவும் தான் அவ்வாறு அழைக்கும் வரை அவர் தன்னை அடித்ததாகவும் தான்யா தெரிவித்தார்.
அதேசமயம் மிசெலி மான்னிங் பாரிஷ் கூறுகையில்,
தான் எரிக்குடன் சம்பந்தப் பட்டிருந்த நான்கு வாரங்களுக்குப் பின்னர் தாம் இருவரும் முழுமையாக ஆடை அணிந்த நிலையில் படுக்கைக்குத் தயாரான போது திடீரென எரிக் தனது முகத்தில் முழுப் பலத்தைப் பிரயோகித்து அடித்ததாகவும் பின்னர் அவர் தன்னைக் கீழே தள்ளி மூச்சுத் திணறச் செய்ததாகவும் தெரிவித்தார்.
"இது பாலியல் ரீதியான விளையாட்டொன்று தவறாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தத் தாக்குதல் எனது ஒப்புதலின்றி இடம்பெற்றது.உத்தியோகத்தர் ஒருவரை இவ்வாறு அடிப்பது பெரும் குற்றம்" என்று அவர் மேலும் கூறினார்.
எரிக்கிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்த அவரது முன்னாள் காதலி தெரிவிக்கையில்,
எரிக் தன் மீது உடலியல் ரீதியான வன்முறைகளை திரும்பத் திரும்ப மேற்கொண்டதாகக் கூறினார்.
அதேசமயம் நான்காவது பெண்ணான முன்னணி சட்டத்தரணி கூறுகையில்,
எரிக்கின் பாலியல் ரீதியான அணுகுமுறைகளுக்கு தான் மறுப்பைத் தெரிவித்ததையடுத்து அவர் தன்னை பலத்தைப் பிரயோகித்து அடித்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் தனக்கு எதிரான மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையாகப் போராடப்போவதாக பட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட ரீதியான ஒப்புதலுடன் கூடிய பாலியல் நடவடிக்கையில் மட்டுமே தான் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த அவர் "நான் யாரையும் பாலியல் ரீதியில் தாக்கவில்லை. அத்துடன் நான் பரஸ்பர ஒப்புதலற்ற பாலியல் நடத்தையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை"எனக் கூறி னார்.
"அந்தக் குற்றச்சாட்டுகளானது எனது தொழில் ரீதியான நடத்தை மற்றும் அலுவலக செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவையாக இல்லாத நிலையில் அவர்கள் நெருக்கடியான தருணமொன்றில் நான் எனது அலுவலக பணியை வழிநடத்துவதை திறம்பட தடுத்துள்ளனர்" என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சட்டமா அதிபராக தெரிவுசெய்யப்பட்டிருந்த எரிக், இந்த வருடம் மீளவும் மேற்படி பதவி நிலைக்கு மீளப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். எரிக்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவரைப் பதவி விலகுவதற்கு நியூயோர்க் ஆளுநர் அன்ட்றூ குவோமா அழைப்பு விடுத்திருந்தார்.
"நியூயோர்க்கின் உயர்மட்ட சட்ட அதிகாரி உட்பட எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர். அதனால் எரிக் ஸ்னெய்டர்மான் சட்டமா அதிபராக சேவையைத் தொடருவது சாத்தியம் என நான் நம்பவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை மேற்கொள்ள ஒரு விசாரணையாளரை தான் கோரவுள்ளதாக அன்ட்றூ குவோமா கூறினார்.
இந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் முன்னாள் மனைவியான ஜெனிபர் கன்னிங் ஹாம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எனக்கு எரிக்கை ஒரு கணவராக, தந்தையாக, நண்பராக சுமார் 35 வருட காலமாகத் தெரி யும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை என்னால் நம்ப முடியாதுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM