நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி

Published By: Daya

09 May, 2018 | 11:08 AM
image

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசோதனை செய்ய பொலிஸ் நிதி மோசடி பிரிவு அனுமதி கோரியிருந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையில் பொது நலவாய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகவும் அந்த நாடுகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் இதற்கு முன்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன் போது, சீ.டபிள்யு ஹம்பாந்தோட்ட பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு கிடைத்த 690 மில்லியன் ரூபா பணத்தை செலவிடும் போது அதில் மோசடிகள் நடந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளன.

 குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு வழங்கப்பட்ட 25 மில்லியனுக்கு அதிகமான பணம் நிறுவனத்தின் கணக்கில் வைப்புச் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 245 ரூபா மாத்திரமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் அஜித் நிவாட் கப்ரல், மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோர் இணை தலைவர்களாகவும் உதய செனவிரத்ன, அனில் நளின் ஆட்டிகல, நாலக கொடஹேவா, பியந்த குமார ரத்நாயக்க, ராணி ஜயமஹா ஆகியோர் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றியிருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அரச சொத்து துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04