எப்போதும் அமைதியின் உருவமாக புன்னகை தவழ வலம் வரும் பாப்பரசரை சினமடைய வைத்த சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள் ளது.
அவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மெக்ஸிக்கோவின் மொரெல்லா நகரிலுள்ள மைதான மொன்றுக்கு விஜயம் செய்த வேளை அவரை சூழ்ந்து கொண்ட கூட்டத்தினர் அவரது கரங்களைப் பற்றி பிடித்து இழுத்தும் அவரது இடுப்பில் கட்டியிருந்த நாடாவை பற்றி இழுத்தும் அவரை சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த வயோதிபர் ஒருவர் மீது நிலைதடுமாறி விழும் நிலைக்கு உள்ளாக்கியதையடுத்து அவர் தனது கட்டுப்பாட்டையும் மீறி சினத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது பாப்பரசர் “என்ன உங்களுக்கு நடந்தது? சுயநலமாக செயற்படாதீர்கள்" என அதட்டும் வகையில் சத்தமிட்டுள்ளார்.
பாப்பரசர் உடனடியாக தன்னை சுதாகரித்துக் கொண்டு அந்தக் கூட்டத்திலிருந்த நபரொருவரின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வதித்த போதும், அவரது முகத்தில் சினம் தொடர்ந்து பிரதிபலித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM