"இலங்கை வரலாற்றிலே மலையக சமூகத்தை வழி நடத்துவதிலே சாதனை படைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்த நாட்டுக்கு நன்றாக தெரியும். ஆனால் அகிம்சை வழியோடு இந்த மக்களின் உரிமைகளை நாங்கள் மீட்டெடுத்து இருக்கின்றோம் ஆனால் அகிம்சையை மீறி புரட்சி செய்யதான் வேண்டுமென்றால், ஆறுமுகன் தொண்டமான் கையை நீட்டினால் போதும் முழு மலையகமும் கொந்தளிக்கும் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார் .
நுவரெலியா நகரில் இடம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 79ஆவது மேதின நிகழ்வின் போது கலந்த கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார் .
தொடர்ந்தும் உறையாற்றிய மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,
"ஆடினார்கள்,ஆடினார்கள், முன்று வருடகாலமாக ஆடினார்கள் அத்தனை பேரையும் உள்ளூராட்சி மன்றங்களில் தூக்கி எரிந்து அவர்களுக்கு நாங்கள் தண்ணீர் காட்டி இருக்கின்றோம் அதுமட்டுமல்ல நாங்கள் வெற்றி பெற்று இருக்கின்றோம் .
மலையக மக்களை யாராவது சீன்டி பார்க்க நினைத்தால் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டான் அமைதியாக இருக்கமட்டார் .
எமது மக்களுக்கு எங்கு அநீதி இழைக்கபடுகிறதோ! அங்கு சென்று மக்களுக்கான தீர்வினை பெற்று கொடுக்கும் வள்ளமையுடையவர் ஆறுமுகன் தொண்டமான் என்பதனை யாரும் மாறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது .
எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரசுடைய மே தின கூட்டத்திற்கு அனிதிரளாக வருகை தந்திருக்கின்ற எமது மக்களை பார்கின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் எங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது." எனவும் தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM