பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் மீது நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் பகுதியின் மாகாணசபை கூட்டமொன்றில் உள்துறை அமைச்சர் கலந்துகொண்டவேளை நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் காரில் இருந்து இறங்கிய வேளை இளைஞன் ஒருவன் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் அந்த இளைஞனை கைதுசெய்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரின் உயிரிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபை சேர்ந்த 21 வயது அபிட் ஹ_சைன் என்ற இளைஞரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டாவது தடவை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள முயன்றவேளை அவரை பொலிஸாரும் பொதுமக்களும் மடக்கிப்பிடித்துள்ளனர்.
துப்பாக்க பிரயோகம் இடம்பெறுவதற்கு முன்னர் அமைச்சர் கிறிஸ்தவ அமைப்பொன்றை சந்தித்து விட்டு வந்தார் இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கும் அதற்கும் தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞனிற்கு கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூலை மாதம் பாக்கிஸ்தானில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM