தென் கென்யாவில் அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 2,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தில் வெளியேற முடியாது சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் மனிதாபிமான குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வெள்ள அனர்த்தத்தால் அந்நாட்டில் வாந்திபேதி உள்ளடங்கலான தொற்று நோய்கள் வேகமாக பரவி வருவதால் மனிதாபிமான அவலநிலையொன்று ஏற்பட்டுள்ளதாக கென்ய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது.
அதேசமயம் ஏனைய ஆபிரிக்க நாடுகளான உகண்டா மற்றும் சோமாலியாவிலும் வெள்ள அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
சோமாலியாவில் வெள்ளத்தால் அரை மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,75,000 பேருக்கும் அதிகமானோர் வீடுவாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM