(ஆர்.யசி)
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையே மாற்றுக்கருத்து இல்லை. எனினும் ஜே.வி.பி தனியே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இலக்கு வைக்காது இனப்பிரைசினைகாக தீர்வினையும் உள்ளடக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 20ஆம் திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு - மக்கள் விடுதலை முன்னணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் ஜே.வி.பி இணங்கும் பட்சத்தில் பிரரனையை ஆதரிக்கும் என தெரிவித்தது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி 20ஆம் அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே கூட்டமைப்பினர் இதனைக் குறிப்பிட்டனர்.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் குறிப்பிடுகையில்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டில் ஒன்றாகும்.
நிறைவேற்று ஜனதிபதி முறைமையினை நீக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாடுகளில் நாம் தொடர்ச்சியாக இந்த நிலைபாட்டினை சுட்டிக்காட்டியுள்ளதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளோம்.
ஆகவே எமது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் நோக்கத்தில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போது அவை இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது.
இதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது என்பது பிரதான காரணியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மிக முக்கிய விடயமாக உள்ளது. இந்த நாட்டின் மிக நீண்டகால இனப்பிரச்சி தீர்க்கப்பட வேண்டியது அத்தியாவசியமான விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM