களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 8 போத்தல் கள்ளு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பீ.ஸ்.பீ.பண்டாரா தலைமையிலான குழுவினார் சென்ற போது, ஒந்தாச்சிமடத்தில் சனநடமாட்டம் அற்ற பிரதேசத்திலேயே குறித்த சட்டவிரோத கள்ளு விற்பனை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குறித்த இருவரையும் கைதுசெய்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்
இந்நிலையில் குறித்த இருவரும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவர்கள் இருவரும் பிணையில் செல்வதற்கும் மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM