கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்ட நிலையில் அவர்களால் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 14 மாதங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது குறித்த வழக்கு மே மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதவான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற எத்தனோல் உற்பத்திச்சாலை தொடர்பாக கடந்த வருடம் 2017 மார் 22 ஆம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் மேற்படி உற்பத்திச்சாலையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த வழக்கு மே மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளான கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக எழுந்த அதிருப்தியை அடுத்து தமிழ் முஸ்லிம் சிங்கள சிவில் சமூகங்களும், சமய அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில் கண்டனங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM