அதிசயமான வாழைக்குலை ( காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

03 May, 2018 | 02:27 PM
image

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

10 முதல் 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூவுள்ளது சிறப்பம்சம்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right