ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் தங்க நகையை அபகரித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் மே முதலாம் திகதி காலை 7.00 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியன அபகரித்து சென்ற நபரை நேற்று மாலை ஹட்டன் பொலிஸார் கைது செய்ததாக தெரிவித்தனர்.
மே மாதம் முதலாம் திகதி அதிகாலை குறித்த நகரசபை தலைவரின் மனைவி கடைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த சந்தேக நபர் தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் மூலம் இவரால் ஐந்து பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவுக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றில் அடகு வைத்திருப்பதாகவும் அந்த பணத்தில் வீட்டுக் கூலி, செலுத்தியிருப்பதாகவும் ஏனைய பணத்தில் ஒரு கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்திருப்பதாகவும், 9000 ரூபாவை செலவழித்திருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
களவாடப்பட்ட நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி உட்பட 11 இலட்சத்து 6 ஆயிரம் ரூபா பணம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் சந்தேக நபரையும், மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும், இன்று ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM