வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காததையடுத்தே குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம் பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயற்பட்ட போது, உடனடியாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM