ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவன் கைது

Published By: Daya

03 May, 2018 | 10:08 AM
image

வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காததையடுத்தே குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம்  பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயற்பட்ட போது,  உடனடியாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  வவுனியப  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04