மாகா­ண­சபை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு முயற்சி.!

Published By: Robert

01 May, 2018 | 09:55 AM
image

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­னது மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்கி உள்­ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. 

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ் அமைப்­புக்கள் குறிப்­பிட்­டன. 

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பி­டு­கையில், 

மூன்று மாகாண சபை­க­ளுக்­கான கால எல்லை நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அவற்­றுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைகள் இது வரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­ப­ட­வில்லை. குறித்த ஒரு­மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை வெளி­யி­டப்­பட்டால் மாத்­தி­ரமே குறிப்­பிட்ட காலத்தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த முடியும். ஆனால், எல்­லை­நிர்­ணய அறிக்கை இது வரையில் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் மாகா­ண­சபை தேர்­தலை செப்­டெம்பர் மாதத்தில் நடத்த முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது.

ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் பிர­த­மரால் எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென தனி­யான குழு­வொன்று நிய­மிக்க முடியும். அந்த குழு­வி­னூ­டாக எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கை­களை விரை­வுப்­ப­டுத்தும் பணி­களை மேற்­கொள்ள முடியும். அவ்­வா­றா­ன­வொரு குழுவும் இது­வ­ரையில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. 

மாகாண சபை­தேர்தல் முறை­மை­தொ­டர்பில் பல­வா­றான விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்­கையும் தேர்­தலை ஒத்­தி­வைக்க கூடிய சூழ்­நி­லையை தோற்­று­வித்­துள்­ளது. 

மேலும் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எல்லை நிரண்ய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென பெப்ரல் அமைப்பு குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போது நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறை­மை­யி­லா­வது மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லினை விரைவில் நடத்­த­வேண்டும் என்றார்.

இது குறித்து கெபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் குறிப்­பி­டு­கையில், 

மாகா­ண­சபை தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்­கா­கவே எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளியிடும் பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. எல்லை நிர்ணய அறிக்கை ளிவெயிடப்படாமல் தேர்தலை நடத்த முடியாது. 

குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேணடுமானால் எல்லை நிர்ணய அறிக்கையும் விரைவில் வெளியிடப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58