நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளமையினால் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு சமூகமளிக்குமாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடபபட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது மறுசீரமைப்பே இன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இவர்களில் 6 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாவர். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் எதிரணியில் அமர்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்கிணங்க அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடமபெற்றது. தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமென்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் முழுமையான மாற்றம் இடம்பெறவில்லை.
மாறாக நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக புதிய பொறுப்புக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் திகதி சரத் அமுனுகம திறன் அபிவிருத்தி தொழில் தொழிற்பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சித்துறை அமைச்சராகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இடர் முகாமைத்துவ அமைச்சராகவும் பைஸர் முஸ்தபா விளையாட்டுத்துறை அமைச்சராகவும் மலிக் சமரவிக்கிரம சமூக வலுவூட்டல் நலன்பேணல் மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொணடனர். இவர்கள் நால்வரும் தாம் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாகவே இந்தப் பொறுப்புகளை எற்றுக்கொண்டனர்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வசமிருந்த அமைச்சுப் பதவிகளே இவ்வாறு நான்கு பேரிடமும் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16பேரின் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. சுதந்திரக்கட்சி வசமிருந்த சமுர்த்தி அமைச்சை தமக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. தற்போது அந்த அமைச்சு மலிக் சமரவிக்கிரமவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோன்றே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது புதிய அமைச்சுப்பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கோரியுள்ளபோதிலும் அதற்கு ஜனாதிபதி இன்னமும் பூரண இணக்கம் தெரிவிக்கவில்லை என்று தெரிகின்றது.
இன்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை வகித்தவர்களின் பொறுப்புக்கள் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஏனையவர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கிடையிலேயே இன்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது பொறுப்புக்கள் மாற்றப்படவுள்ளன. புதிதாக இராஜாங்க அமைச்சர்களுக்கோ பிரதி அமைச்சர்களுக்கோ பதவி மாற்றங்கள் இடம்பெறமாட்டாது என்றே தெரிகின்றது.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர கூறுகையில்.
புதிய அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. இதில் அரசாங்கத்தை குழப்பும் வகையிலோ அல்லது தற்காலிக மாற்றத்தை கொண்டுவரும் எந்த மாற்றங்களும் இடம்பெறாது. தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் பலமாக முன்னெடுத்து செல்லக்கூடிய வகையிலும் நாட்டின் இஸ்திரத் தன்மையினை பலப்படுத்தும் வகையிலும் புதிய அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்படும். நாளைய (இன்று) தினத்தில் இருந்து உருவாகும் அமைச்சரவை மூலமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடையும். இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கை நீட்டி சுட்டிக் காட்டாது இரண்டு கட்சியும் இணைந்து ஒரே நேரத்தில் நாட்டினை முன்னெடுத்து செல்லும் வகையில் மாற்றங்களை உருவாக்கவுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகள் தேசிய அரசாங்கம் முழுமையாக அதன் பணிகளை செய்து முடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM