ஐ.பி.எல். இன் இன்றையப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
11 ஆவது ஐ.பி.எல். போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் இன்றைய 30 ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.
இப் போட்டி புனேயில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியுமடைந்து புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்திலும், டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப் பட்டியலில் இறுதியிலும் உள்ளன.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
டெல்லி அணிக்கு புதியத் தலைவராக பொறுப்பேற்ற ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடன் இன்றையப் போட்டியிலும் டெல்லி அணியை வழிநடத்தவுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவினாலும் அனுபவம் மிக்க பலமான அணியாகவே உள்ளது.
இன்றையப் போட்டியில் சென்னை அணி விளையாடுவதால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இப் போட்டி அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM