பத்தனை போகாவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் இன்று காலை 11 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார்.
திம்புள்ள பத்தனை பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதுடன் 10 மதுபான போத்தல்களும் மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.
வெசாக் பூரணையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த வீட்டில் இந்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கபட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM