தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் கடும் வரட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66,500 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடல் சீற்றத்தால் 25 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் அவதிக்குட்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புத்தளம் மாவட்டம் கூடுதலான வரட்சிக்குட்பட்ட பிரதேசமாக இனம் காணப்பட்டுள்ளது.
சிலாபப் பிரதேச செயலகப்பிரிவில் 7769 குடும்பங்களைச் சேர்ந்த 29252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனமடு பிரதேச செயலகப் பிரிவில் 10174 குடும்பங்களைச் சேர்ந்த 26715 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கின்றது. மற்றும் கருவெலகஸ்வவ பிரதேச செயலகப் பிரிவில் 7162 குடும்பங்களைச் சேர்ந்த 22497 பேரும், பள்ளம பிரதேச செயலகப் பிரிவில் 7013 குடும்பங்களைச் சேர்ந்த 22446 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 6170 குடும்பங்களைச் சேர்ந்த 22694 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாவெவ பிரதேச செயலகப் பிரிவில் 2961 குடும்பங்களைச் சேர்ந்த 22694 பேரும், வண்ணாத்துவில்லு பிரதேச செயலகப் பிரிவில் 3181 குடும்பங்களைச் சேர்ந்த 12796 பேரும், மாதம்பை பிரதேச செயலகப் பிரிவில் 3379 குடும்பங்களைச் சேர்ந்த 10113 பேரும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 4194 குடும்பங்களைச் சேர்ந்த 14206 பேரும், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 345 குடும்பங்களைச் சேர்ந்த 12257 பேரும், ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் 6591 குடும்பங்களைச் சேர்ந்த 25628 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM