சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் அதிகமான பாதிப்பை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமையல் எரிவாயுவிற்கான விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதிக்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1676 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என தெரிவத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM