(நெவில் அன்தனி)
பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன.
இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது.
போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் விளையாடி 32ஆவது நிமிடத்தில் அல்பிரட் பெனடிக்ட் அனோஜன் மூலம் முதலாவது கோலை ஹென்றியரசர் அணி போட்டது.
இடைவேளைளயின் பின்னர் முழுமைாயன ஆதிக்கம் செலுத்திய புனித ஹென்றியரசர் அணி மேலும் ஏழு கொல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.
அனோஜன் (50 நி., 85 நி.), ஞானேஸ்வரன் அன்தனிராஜ் (63 நி.), அல்பிரட் தனேஷ் (70 நி.), ரெக்சஸ் அமலதாஸ் மதூசன் (82 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டதுடன் தனேஷ் உதைத்தப் பந்தின் மூலம் திருச்சிலுவை பின்கள வீரர் கோவிந்த சுதீப் இரண்டு சொந்தக் கோல்களைப் போட்டுக்கொடுத்தார்.
ஸாஹிராவுக்கு இறுக்கமான வெற்றி
ஸாஹிரா அணிக்கும் கட்டுநேரிய புனித செபஸ்தியார் அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என ஸாஹிரா வெற்றிபெற்றது.
போட்டி ஆரம்பித்து 3 நிமிடங்கள் ஆனபோத எம். ஷவ்ரான் மிக அலாதியாக கோல் ஒன்றைப் போட்டு ஸாஹிராவை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.
போட்டியின் 76ஆவது நிமிடத்தில் புனித செபஸ்தியார் அணியின் பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்திக்கொண்ட எம். ஆக்கிப், ஸாஹிராவின் இரண்டாவது கோலைப் போட்டார்.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சிகளை எடுத்துக்கொண்போதிலும் அவை கைகூடாமல் போயின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM