(ரி.விரூஷன்)
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தி இருவரை கொலை செய்து பலரை காயமடையவ செய்த வழக்கில் தண்டனை குற்றவாளிகளான ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவர் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை உடனடியாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சானது சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சட்டமா அதிபருக்கு அனுப்பட்ட கடிதத்திலேயே மேற்படி விடயமானது கூறப்பட்டுள்ளதுடன் அக் கடிதத்தின் பிரதியானது யாழ்.மேல் நீதமன்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
17.04.2018 திகதியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கடிதமானது சட்டமா அதிபருக்கு அனுப்பட்டிருந்ததுடன் அதன் பிரதியும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பட்டிருந்தது.
இக் கடிதத்தில்,
நாடு கடத்தல் உடன்படிக்கையை உடனடியாக நடமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு யாழ்.மேல் நீதிமன்றானது பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே சட்டமா அதிபருக்கு 30.11.2017 அனுப்பிய கடிதத்தை மீளவும் நினைவுபடுத்தி விரைவாக நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இந் நாடுகடத்தல் நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக யாழ்.மேல் நிதிமன்றுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என அக் கடித்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM