கனடாவின் டொரன்டோ நகரில் பொதுமக்கள் மீது வேன் சாரதியொருவர் தனது வேனை மோதி தாக்கியதில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்று நடைபாதை மேல் ஏறி பொதுமக்களை இலக்கு வைத்து மோதியதை நேரில் பார்த்தாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த பலர் குறிப்பிட்ட வேன் சாரதி வேண்டுமென்றே வேனை பொதுமக்கள் மீது செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.
வேன் சாரதி தனது வாகனத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை விபத்தென்றால் அவர் தனது வேனை நிறுத்த முயன்றிருப்பார் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக் மினாசியன் என்ற நபரே வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள கனடா பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அலெக் மினாசியன் வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியுள்ளார் என கருதலாம் என தெரிவித்துள்ள டொரான்டோவின் பொலிஸ் அதிகாரிகள் எனினும் தாக்குதலின் நோக்கம் என்னவென்பது இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM