சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்பு செய லர் கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோர் தொடர்புபட்டிருப்பதாக குற்றப் புலனயவுப் பிரிவு சந்தேகிப்பதாகவும், அதனால் அது குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு நேற்று கல்கிசை நீதிவானுக்கு அறிவித்தது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை கோரி நேற்று அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தகொடவினால் கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் ஒன்றரை மணி நேர வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானுக்கு பதிலளிக்கும் போதே மேற்படி விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
விளக்கமறியலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மே முதலாம் திகதி அறிவிப்பதாக கூறிய நீதிவான் மொஹம்மட் மிஹால், அதுவரை அவரையும் இவ்வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபாலவையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, விசாரணைப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றினை மன்றில் சமர்பித்த நிலையில் கொலையாளிகளைத் தேடிய பல்முனை விசாரணைகள் தொடர்வதாக நீதிவானுக்கு அறிவித்தனர்.
இதன்போது மன்றில் கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ. திசேரா,
இராணுவத்தின் 112 ஆவது பிரிகேட் தொடர்பிலான விசாரணைகள் தற்சமயமும் தொடர்கிறது. மேலதிகமாக மூன்று இராணுவ வீரர்களின் வககு மூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனைவிட லசந்த விக்ரமதுங்கவுடன் சேவையாற்றிய நிர்மலா கண்ணங்கர எனும் ஊடகவியலாளரின் வாக்கு மூலத்தை நாம் பதிவு செய்தோம். அதன் போது அவர், லசந்த கொலை செய்யப்பட்ட போது ஸ்தலத்துக்கு தான் சென்றதாகவும் அப்போது அங்கிருந்த லசந்தவின் காருக்குள் அவரது குறிப்புப் புத்தகத்தை அவதானித்ததாகவும், பின்னர் அது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவிடம் வினவிய போது ஒரு செவிமடுக்கும் கருவி மட்டுமே இருந்ததாக கூறியதாகவும் குறிப்புப் புத்தகம் இருக்கவில்லை என பதிலளித்ததாகவும் தெரிவித்தார். இதனால் அப்போதில் இருந்தே சந்தேக நபர் குறிப்புப் புத்தகம் தொடர்பிலான தகவல்களை ஏதோ காரணத்துக்காக மறைக்கின்றார். இந் நிலையில் பிணை சட்டத்தின் விதிவிதாங்களுக்கு அமைவாக சந்தேக நபரின் விளக்கமறியலை நீடிக்கவும். என கோரினார்.
இதனையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட விஷேட பிணை கோரிக்கையை முன்வைத்தார்.
' எனது சேவை பெறுநர் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி முழு நாளும் விசாரிக்கப்ப்ட்டு அன்ரு இரவு 10.45 மனிக்கு கைது செய்யப்ப்ட்டார். மறு நாள் மன்ரில் ஆஜர் செய்யப்ப்ட்டமை முதல் இன்று வரை விளக்கமரியலில் இருந்து வருகின்றார். சுமார் இரண்டரை மாதம் அவர் விளக்கமரியலில் இவ்வாறு காலம் கழிக்கின்றார்.
ஏற்கனவே நான் முன் வைத்த இரு பிணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. காரணம் குற்றப் புலனயவுப் பிரிவு விசாரணைகள் நிறைவடைய வில்லை எனவும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் கூறிய விடயங்களை மையப்படுத்தியே பிணை நிராகரிக்கப்ப்ட்டன. எனது சேவை பெறுநருக்கு எதிராக முன்வைக்கபப்டும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை. அக்குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
லசந்த கொலை உட்பட அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளை யார் செய்தார்கள் என்பது முழு நடடுக்கும் தெரியும். அது இரகசியமல்ல. இது தொடர்பில் அப்போதிருந்த முன்னணி இராணுவ தலைவர்கள் செய்த சதி, நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்கள் எழுதியுள்ளன. எனவே அது குறித்து யாருக்கும் ஊகித்துக்கொள்ள முடியும்.
எனது சேவை பெறுநர் லசந்த கொலை தொடர்பில் விசாரணை செய்ய சி.ஐ.டி. யிடம் கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைத்து அதன்படி 2009.11.25 அன்ரு அதனை சி.ஐ.டி.க்கு பொறுப்பளித்தவர். இந் நிலையில் எனது சேவை பெறுனரை இக்குற்றத்துடன் தொடர்புபடுத்தியுள்ள சி.ஐ.டி. அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 174,190,193,198,201,209,454,162,163 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் சுமத்துகிறது.
லசந்தவின் குறிப்புப் புத்தகம் தொடர்பிலும், பொலிஸ் புத்தக பதிவுகள் மாற்றப்பட்டமையும் எனது சேவை பெறுநரின் ஆலோசனைக்கு அமைய செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனயவுப் பிரிவு கூறுகின்றது. எனினும் அது தொடர்பில் பெறப்பட்ட சாட்சியங்களில் ஒன்றில் கூட எனது சேவை பெறுநரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் லசந்தவின் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த வைத்தியர் சுனில் குமாரவும் எனது சேவை பெறுநரும் உறவினர்கள் என்பதை மையபப்டுத்தி சாட்சியகளுக்கு அச்சுருத்தல் ஏர்படலாம் என்கிறது சி.ஐ.டி. ஆம், சுனில் குமார், எனது சேவை பெறுநரின் மனைவியின் உறவினர். அவருடன் எனது சேவை பெறுநர் தொடர்பில் உள்ளார். உறவினர்களுடனான உறவு பிணை வழங்க தடையில்லை.
அத்துடன் தற்போது சுனில் குமார வழங்கிய பிரேத பரிசோதனை அரிக்கை பொய் என நிரூபணமாகியுள்ளது. விஷேட வைத்திய நிபுணர் மொஹான் டி சில்வாவின் அரிக்கை ஊடாகவும், சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையிலான மூவர் கொண்ட குழுவின் அறிக்கை ஊடாகவும் அது உறுதியாகியுள்ளது. எனவே சுனில் குமாரவுடனான தொடர்பாடல் விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையப்போவதில்லை.
எனவே அடிப்படையற்ற விடயங்களை நிராகரித்து 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்தை அடிப்படையாக கொன்டு சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரிகின்றேன். என்றார்.
இதனையடுத்து பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா கருத்துக்களை முன்வைத்தார்.
' லசந்தவின் கொலை இடம்பெற்ற 2009.01.8 ஆம் திகதிக்கும் 2015 அம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கும் இடையில் சட்டத்தின் ஆட்சி எந்தளவில் இருந்தது என்பது எலோருக்கும் தெரியும். இக்காலப்பகுதியில் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்ட விசாரணைகளில் சி.ஐ.டி. லசந்தவை பின் தொடர்ந்த 5 தொலைபேசிகளை தொலைபேசி கோபுர தகவல்களுக்கு அமைய கண்டறிந்தனர். அவை இரானுவ புலனயவுப் பிரிவுக்கு சொந்தமானது என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
இவ்வாறான பின்னணியில் அந்த விசாரணைகள் உடனடியாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு ஏற்பட்ட சி.ஐ.டி. மீதான திடீர் காதலால், சி.ஐ.டி.க்கு வேலை பளு அதிகம் எனக் கூறி, லசந்த, கீத் நொயார், உபாலி தென்னகோன் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அவரால் மாற்றப்பட்டன.
அதன் பின்னர் அது தொடர்பிலான விசாரணைகள் அப்போதைய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ர வாகிஷ்ட, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் உள்ளிட்ட கூழ்வினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11 இராணுவத்தினர் அவசரகால சட்டத்தில் கைது செய்யப்பட்டு 6 நாட்களில் பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது குரித்து நீதிமன்றுக்கு கூட அறிவிக்கப்படவில்லை.
2015 செப்டம்பரில் நாம் இந்த விசாரணையைப் பொருப்பேற்ற போது முதலில் ஏர்கனவே செய்யப்ப்ட்ட அனைத்து விசாரணைகளையும் ஆராய்ந்தோம். அதன் பின்னரேயெ விசாரணைகளை ஆராய்ந்தோம். அதன்படியே முதலாம் சந்தேக நபரான பினையில் உள்ள உடலாகமவை கைது செய்தோம். அவர் லசந்தவின் சாரதியை கடத்திச் சென்று, லசந்தவை கோத்தாவே கொன்றார் எனவும் மிக் விமான கொள்வனவு தொடர்பிலான விவகாரம் தொடர்பில் எழுதியமையே காரணம் எனவும் கூறுவதை நிறுத்துமாறு அச்சுறுத்தியுள்ளார்.
நாம் அரசியல் தேவைக்காக விசாரணைச் செய்யவில்லை. அவ்வாறு செய்தால் அரசாங்கம் மாறினால் நாமும் இந்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரிகளைப் போன்று குற்றவாளிக் கூன்டில் நிர்போம் என்பது எமக்கு தெரியும்.
லசந்தவின் குறிப்புப் புத்தகத்தை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்கவே மீட்டுள்ளார். அதனை அவர் அப்போது கல்கிசை குற்றவியல் பொறுப்பதிகாரி, தற்போதைய 2 ஆம் சந்தேக நபர் சுகந்தபாலவிடம் விசாரணைகளுக்காக கொடுத்துள்ளார்.
இந் நிலையில் தான் 2009.01.16 விடுமுறிஅயில் இருந்து திரும்பிய 3 ஆவது சந்தேக நபர் நாண்யக்கார அந்த புத்தகம் உள்ளிட்ட சாட்சியங்களை மாற்ற அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன கோரியே லசந்தவின் குறிப்புப் புத்தகம் கைமாறியுள்ளது. அப்போது இது கோத்தாவின் வேலை எனவும் அதனால் விளக்கமறியலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அதனுடன் தொடர்புடைய சாட்சி அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கின்றோம்.
அதனாலேயே இந்த விடயத்தில் விடயம் அறிந்தவர்களின் வககு மூலங்களை மையபப்டுத்தி விசாரணைகளை முன்னெடுக்கின்ரோம்.
மூன்ராம் சந்தேக நபர் உயர் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர் என்ற ரீதியில் அவருக்கு பொலிஸ் தினைக்களத்துக்குள் செல்வாக்கு உள்ளது. எனவே அவர் பினையில் இருப்பின் விசாரணைகளுக்கு படஹிப்பு ஏர்படும். எனவே பிணை வழ்னக்க வேண்டாம். என்றார்.
வாதங்களை செவிமடுத்த நீதிவான் பினை தொடர்பில் எதிர்வரும் மே 1 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்து அதுவரை சந்தேக நபர்களை விளக்கமரியலில் வைக்க உத்தர்விட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM