நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிள் நாளை 24 ஆம் திகதி வரை கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், அதன் காரணமாக மீன் பிடி தொழிலுக்குச் செல்லும் மீனவர்களை கடலுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசங்களில் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நாடளாவிய ரீதியில் காணப்படும் 8 மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை சுமார் 2.5 மீற்றர் தொடக்கம் 3.5 வரை உயரக் கூடும்
புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பிராந்தியங்களை சூழவுள்ள மீனவ தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
எனினும் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் 117 என்ற அவசர இலக்கத்திற்கும், 011-3613622 என்ற இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்தி அனர்த்தம் தொடர்பாக அறிவிக்க முடியும். எனவே மீனவர்கள் மாத்திரமின்றி கடற்கரை பிரதேச வாசிகளும் அவதானத்துடன் செயற்படுவதோடு கடலுக்கு நீராடச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM