ஜேர்மனிய முனிச் நகரிலிருந்து தென் ஆபிரிக்க டுர்பான் நகரை நோக்கிப் பயணித்த விமானமொன்று எரிபொருளை நிரப்புவதற்காக சிம்பாப்வேயில் தரையிக்கப்பட்ட போது, அந்த விமானத்தில் சடலமொன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க அரசாங்கத்தால் வாடகைக்குப் பெறப்பட்டிருந்த மேற்படி அமெரிக்க விமானத்தில் தென் ஆபிரிக்க றிஸேர்வ் வங்கிக்கான பெருமளவு பணம் ஆடைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயிலுள்ள விமான நிலையத்தின் ஓடு பாதையில் மேற்படி விமானம் தரையிறங்கிய போது இரத்தத் துளிகள் அவதானிக்கப்பட்டன.
இதன்போது அந்த விமானத்தின் உத்தியோகத்தர்கள், பறவையொன்று விமானத்தில் மோதியதன் விளைவாக இந்த இரத்தத் துளிகள் சிந்தியிருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதினர். தொடர்ந்து அவர்கள் இரத்தத் துளிகள் காணப்பட்ட விமானத்தின் மறைவிடப் பகுதியை திறந்த போது அதற்குள் சடலமொன்று தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பில் சிம்பாப்வே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் காணப்பட்ட சடலம் ஆபிரிக்கப் பிரஜையொருவருடையது போன்று தோன்றுவதாகவும் அந்த சடலத்தின் தலையில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் இதற்கு முன்னர் உகண்டா, நைஜீரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட நபர் இதற்கு முந்திய விமானப் பயணமொன்றின் போது ஆபிரிக்க நாடொன்றிலிருந்து ஐரோப்பா செல்லும் முகமாக அந்த விமானத்தில் மறைந்து பயணத்தை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற ்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM