பன்னாட்டு தமிழ்ச்சங்கக் கூட்ட மைப்புத் தலைவர் தணிகாசலம், தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பு நிறுவுநர் ஓரிசா பாலு, கம்போடியா தமிழ் பேரவை தலைவர் ராமசாமி, தென்கிழக்காசியத் தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் விசாகன் மைலாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் மே மாதம் 19, 20 ஆம் திகதிகளில் கம்போடியா அங்கோர்வாட் கோயிலுக்கு அருகில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி ராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்
பார்க்கப்படுகின்றது. முதன்மையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், புருனே, பப்பூவா நியூகினி ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி உலக நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழர்களுக்கு தென்கிழக்காசியாவின் பழமை வாய்ந்த பாரம்பரிய கோயில்கள், தற்போதைய தென்கிழக்காசிய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள பண்டைய கால தமிழர்களின் கலை, பண்பாடு, கலாசாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்ற உள்ளனர்.
பிற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்வான், இலங்கை மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், டென்மார்க், ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, டுபாய், சவூதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் கம்போடியாவின் சியாம் ரீப் தென் கிழக்காசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மேலும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து பன்னாட்டு வணிக மையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தென் கிழக்கு மற்றும் கம்போடிய மக்களும் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் அமைச்சர்கள், துணை
வேந்தர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரைத்துறை பிரமுகர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை ஒரிசா பாலு 91 99402 40487 தணிகாசலம் 9198846 12351 கம்போடியா ராவ் 855 969296 456 விசாகன் 94 660 60030, 628159898211 விக்கி: 0777 318030 வீரமூர்த்தி 077 6494836 ஆகியோரு டன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM