ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐந்துபேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளர் ரட்ணசிறி எதிரிசிங்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட குறித்த முகாமையாளர் இரவு முழுவதும் இடம்பெற்ற விசாரணையினை அடுத்து நேற்று முற்பகல் ஹொரணை பதில் நீதிவான் காந்தி கன்னங்கர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு விள்ளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாராமுகமாகவும் பாதுகாப்பு விதிமுறைகளை கபைபிடிக்காமை ஊடாகவும் ஐநது உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை சட்டகோவையின் 297,277 ஆகிய அத்தியாயங்களின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமொன்றை புரிந்துள்ளதாக பொலிஸார் நேற்று நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படியே அவர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே இந்த அனரத்தத்தின்போது உயரிழந்த 41 வயதான பியந்தகுமார பெரேரா, 32 வயதான திலிப் கசுன், 28 வயதான லால்புஷ்;ப குமார, 23 வயதான வருண சந்திரசேகர, 44 வயதான ஆரியபால பெரேரா, ஆகியொரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகளும் நேற்று இடம்பெற்றன.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற தொழிற்சாலைக்கு நேற்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் சென்று விஷேட சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். குறித்த தொழிற்சாலை உரிய முறையில் கழிவகற்றல் செயற்பாட்டை முனனெடுக்கவில்லை என குற்றம் சாட்டி அதனால் தமது கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறியும் ஊர் மக்களும் இந்நிறுவனததற்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நிலைமை கைமீறி செல்வதை மேலதிக பொலிஸ் படை ஊடாக பொலிஸார் தடுத்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உரிய கழிவகற்றல் நியமங்கள் பின்பற்றப்படாமை தொடர்பில் இந்நிறுவனத்தில் சுற்றாடல் அறிக்கையை இரத்து செய்திருந்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் இந்த இரத்து அமுலில் இருக்கும் என அறிய முடிகின்றது. இதனிடையே இந்த தொழிற்சாலையை முற்றாக இழுத்து மூட நடவடிக்கை எடுப்பதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM