பால்மா ஒரு கிலோவின் விலை 75 ரூபாவாலும் சமையல் வாயு சிலிண்டரொன்றின் விலை 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால்மா விலை மற்றும் சமையல் கேஸ் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் கேஸ் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால், இந்நாட்டு பால்மா மற்றும் கேஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும்படி வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடமும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஒருகிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் கேஸ் விலை சிலிண்டரொன்றுக்கு 275 ரூபாவாலும் அதிகரிக்கும்படி இந்நிறுவனங்கள் பாவனையாளர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
தற்போது 12.5 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரொன்றின் விலை கொழும்பில் 1431 ரூபாவாகவும் பால்மா கிலோவொன்று 810 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்படத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM