மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட பாரிய அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன் னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.
மின்சார நற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானவை. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும் உள்ளது. அது ஒரு முறைதான். ஆனால் இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனையாகவுள்ளது. அதேவேளை ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வியாகவுள்ளது .
ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது அரசாங்கத்தில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தில் இருக்கின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் உள்ளது.
மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கு தலைவரை தேடிக்கொண்டிருக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM