(எம்.எப்.எம்.பஸீர்)
திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேல் மற்றும் தென் மாகாணங்களில் மட்டும் முன்னெடுத்த விஷேட நடவடிக்கைகளில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் 30 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 5 கைக்குண்டுகள் 13 துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் இக்காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
2018 ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து கடந்த 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இக்காலப்பகுதியில் 5 கைக்குண்டுகள், இரு ரீ56 ரக துப்பாக்கிகள், ரீ56 ரக துப்பாக்கி மெகசின் ஒன்று, ரீ56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 151 உம் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை விட 7 வாள்கள். ஒரு கைத்துப்பாக்கி, இரு கைத்துப்பாக்கி மெகசின்கள், 9 ரிவோல்வர்கள் மற்றும் ரிவோல்வர் கைத்துப்பககிகளுக்கு பயன்படுத்தப்ப்டும் 185 தோட்டாக்கள், 810 வேறு தோட்டாக்கள் என்பனவும் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைவிட ஹெரோயின் 56 கிராமும், ஐஸ் போதைப் பொருள் 111 கிராமும் அதிரடிப் படையினரால் மீட்கபட்டுள்ள நிலையிலேயே 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM