வெளி­நாட்டு பெண்ணை துஷ்­பி­ர­யோகம் செய்த 6 பேர் கைது.!

Published By: Robert

18 Apr, 2018 | 11:07 AM
image

வெலி­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மிரிஸ்ஸ பகு­தியில் வெளி­நாட்டு பெண் ஒரு­வரை பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­விட்டு அங்­கி­ருந்த ஒல்­லாந்து பிரஜை ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறப்­படும் ' பீச் போய்ஸ்'  ஆறு பேரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வரின் சாட்­சி­யத்தின் படி இந்த ஆறு பேரையும் கைது செய்த பொலிஸார் அவர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

Image result for வெளி­நாட்டு பெண்ணை துஷ்­பி­ர­யோகம்

இத­னி­டையே வெலி­கம - மிதி­கம கடலில் கடல் சறுக்கு விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த நான்கு இஸ்ரேல் பிர­ஜைகள் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தேக நபர்­களை கைது செய்ய தேடி  வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

 இந்த சம்­ப­வங்கள் குறித்து மேலும் அறிய வரு­வ­தா­வது,

 கடந்த வாரம்  மிரிஸ்ஸ பகு­தியில் 6 வெளி­நாட்டுப் பெண்கள் கூட்­டாக இருந்­துள்­ளனர். அவர்­க­ளுடன் ஒல்­லாந்தில் இருந்து வந்த பிரஜை ஒரு­வரும் நட்­புடன் இருந்து வந்­துள்ளார். 

இவர்கள் மிரிஸ்ஸ பகு­தியில் இரவு நேர களி­யாட்ட விடுதி ஒன்றுக்கு முன்­பாக கடற்கரை பகு­தியில் இருந்த போது,  அப்­ப­கு­தியில் இருந்த பீச் போய்ஸ் சிலர் அவர்­களில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதி­யாக பலாத்­காரம் செய்­துள்­ளனர்.இதன்­போது ஒல்­லாந்து பிரஜை மீதும் அவர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். 

இது தொடர்பில் பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே ஆறு பேர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

இத­னை­விட மிதி­கம கடலில்  கடல் சறுக்கு விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்த போது இஸ்ரேல் பிரஜை ஒரு­வ­ருக்கும் அங்­கி­ருந்த உள்­நாட்­ட­வர்கள் சில­ருக்கும் இடையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. 

இதன்போது அங்­கி­ருந்த இஸ்ரேல் பிர­ஜைகள் நால்வர் மீது தாக்­குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08