பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்தான நாடுகளின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அடுத்த மாநாட்டை 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்தான நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் அடுத்த வருடத்துக்கான மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் செயற்குழு கூட்டத்திலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம், அடுத்த வருட மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ஒன்றியத்தின் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு மோல்ட்டா நாட்டில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்தான நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, 2019 ஆம் ஆண்டில் இடம்பெறக்கூடிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.
அமைச்சரின் வேண்டுகோளை பரிசீலனை செய்த குறித்த ஒன்றியம் அதற்கான அனுமதியை தற்போது வழங்கியுள்ளது. பொதுநலவாய மாநாட்டு நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் மாநாடு ஆசிய நாடொன்றில் இடம்பெற இருப்பது இதுவே முதல் தடவையாகும். உலகில் 10 வலயங்களை மத்திய நிலையங்களாகக்கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM