ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு மீண்டும் நாளை வியாழக்கிழமை கூடவுள்ளது. இதன்போது கட்சியின் பதவிகளுக்காக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை யில் அலரிமாளிகையில் மறுசீரமைப்பு குழு கூடவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இதன்படி கட்சியின் தவிசாளர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
தற்போது குறித்த பதவிகளில் இருப்பவர்களின் பதவிக்காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனினும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு மதிப்பளித்து தவிசாளராக இருந்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் கபீர் ஹாஷிமும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவான மறுசீரமைப்பு குழு கடந்த 11 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடி ஆராய்ந்தது.
இதன்போது பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரங்களை பகிர்ந்து மூன்று செயலாளர் பதவிகளை உருவாக்குவது குறித்து கலந்தாலோனை செய்யப்பட்டது. இதற்கு அனைவரதும் ஆதரவும் கிடைக்கபெற்றது. இதன்பிரகாரம் ஊடக செயலாளர், பிரசார செயலாளர் மற்றும் தொழிற்சங்க செயலாளர் ஆகிய புதிய பதவிகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலர் அகில விராஜ் காரியவசம் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் நடந்து முடிந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை நடந்த மறுசீரமைப்பு குழு கூட்டத்தில் பதவிகளுக்கான பெயர்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்படவில்லை. நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ள மறுசீரமைப்பு குழு கூட்டத்தின் போது கட்சியின் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்க கூடும் என தெரியவருகின்றது. எனினும் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைத்து தீர்மானித்த பின்னர் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM