நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் “குழிப்பந்தாட்டம்” கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்காக இடங்களை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதி தலைவர் ஏ.எம்.பாமிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தின்போது, அட்டனுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அட்டனுக்கு வருகை தந்திருந்த பிரதமர் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளை வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பத்தக்க பிரதேசங்களாக மாற்றியமைக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக பொகவந்தலாவை பிரதேசத்தை உல்லாச பயணிகள் விரும்பத்தக்க பிரதேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கை இன்று பிரதமரால் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் பொகவந்தலாவை டின்சின் தோட்டத்திற்கு விசேடமாக வருகை தந்த பிரதமர் அத்தோட்டத்தில் கோல்ப் மைதானம் ஒன்றையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகள் தங்கியிருந்து பார்வையிடுவதற்கான உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.
அதேவேளை பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கும் பிரதமர் விஜயத்தை மேற்கொண்டார்.
வெகுவிரைவில் இப்பகுதி உல்லாசப் பயணிகள் அதிகமாக வருகை தரும் பிரதேசமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM