பாராளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாட்டின் உச்சகட்டமாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதி தனது சிறப்பு அரசியல் அதிகாரங்களைக் கொண்டு பாராளுமன்றத்தை ஒத்திவைத்தாலும் அதற்கான சரியான காரணங்களை குறிப்பிடுவதும் அவரது பொறுப்பாகும் என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் தெரிவித்தனர்.
இம்மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
சுனில் ஹந்துன்னெத்தி மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும்போது அதற்கான காரணத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதும் அவரது பொறுப்பாகவே காணப்படுகின்றது. ஆனால் ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் செயற்பட்டுள்ளதுடன், அவரது சார்பில் செயற்படும் நிர்வாகிகளும் தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றனர்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில் இருந்து 16 உறுப்பினர்கள் வெளியேறியுள்ளமை கட்சிகளின் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்துகின்றது. தேசிய அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை ஒத்திவைத்துள்ளமை அரசியல் கட்சிகளின் மத்தியில் பல்வேறுபட்ட மாறுபட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
ஜனாதிபதி தனது விசேட அதிகாரங்களை பயன்படுத்தும்போது அதற்கான காரணங்களை குறிப்பிடுவதும் அவரது பொறுப்பாக காணப்படுகின்றது. தமது கட்சியில் காணப்படும் குறைபாடுகளை சீர் செய்வதற்கான கால அவகாசத்தினை ஏற்படுத்தவே பாராளுமன்றத்தினை ஒத்திவைத்துள்ளார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 உறுப்பினர்களின் அரசியல் இருப்பு நிலை வியாழக்கிழமை வெளிப்படவிருந்தது. அவர்கள் கூட்டு எதிரணியினருடன் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியாக செயற்படுவார்களா, அல்லது தனித்து செயற்படுவார்களா என்பதும் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தின் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்திலே ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வை பிற்படுத்தினார். ஜனாதிபதியின் நடவடிக்கையானது வன்மையாக கண்டிக்கத்தக்கதுடன் பிழையான முன்னுதாரணமாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் காரணமாக கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செல்லமுடியாது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையின் பிரதி பலனாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. தற்போது பாராளுமன்ற அமர்வும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
சித்திரை புத்தாண்டுக்குப்பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிமீண்டும் கூடும் என்றே பாராளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM