“நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்ட அனைவரையும் கைதுசெய்ய அரசாங்கம் சதி”

Published By: Priyatharshan

16 Apr, 2018 | 05:22 PM
image

(இரோஷா வேலு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது. இதனால் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை சந்தித்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் எம்மை கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கைது அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். 

சதொச நிறுவன நிதிமோசடி தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலமளிக்க வருகை தந்திருந்தார். 

இதன்போது அமைச்சரின் உதவிக்காக வருகை தந்திருந்த வேளையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு முழு மூச்சாக செயற்பட்டவர் மகிந்தானந்த அளுத்கமகே. இதனாலேயே அவரை தற்போது கைதுசெய்துள்ளனர். 

எதிர்வரும் காலங்களில் அப்பிரேரணையில் பிரதமருக்கு எதிராக கைச்சாத்திட்ட எம் அனைவரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெறும். 

பிரதமரை கட்சித் தலைமையிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுமாறு கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாது தனது நலன்களுக்காகவும் சட்டங்களை மாற்றிக் கொண்டு பழி வாங்கல் அரசியலையே தற்போது அவர் நிகழ்த்திக் கொண்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27