புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
கலாசார மனிதனை பரிபூரணப்படுத்தும் வகையிலேயே மானிட கலாசாரம் பல யுகங்களாக பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றது, உலகின் பல்வேறு இனத்தவர்களும் வருடாந்தம் கொண்டாடும் அவர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கலாசார வைபவங்கள் அவர்கள் தமது பாரம்பரிய உரிமையுடன் கொண்டிருக்கும் பிணைப்பினையும் அயராத அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துகின்றது.
சிங்கள-தமிழ் புத்தாண்டின் மூலமாக கீழைத்தேய வாசிகளாகிய எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது.
புதுவருடம் என்பது உண்மையிலேயே புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதேயாகும். புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் தத்தமது நம்பிக்கைக்கு அமைவாக புத்தாண்டு சம்பிரதாயங்களுடன் இணையும் இந்த புதுமனிதன், புத்தாண்டு பிறப்புடன் அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி சொந்தபந்தங்களை காணச் செல்லும் ஒரு சொந்தக்காரனாகவே இச் சமூகத்தில் பிரவேசிக்கின்றான் என ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியின் முழு விபரமும் வருமாறு,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM