நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையானது நாளை மறுதினம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்கும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்துடன் இணைய தீர்மானித்தால் அவர்களை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் தொடரும். ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஆறு அமைச்சர்களை புதிய அமைச்சரவையில் இணைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
பிரதரை எதிர்த்த சுதந்திரக் கட்சியின் 16 பேரும் மீண்டும் வர விரும்பினால் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாலர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கேள்வி: இரண்டு தரப்பு சண்டை முடிந்துவிட்டதா?
பதில்: அவ்வாறு எதுவுமில்லை.
கேள்வி: சுந்திரக் கட்சியின் 16 பேர் அரசாங்கத்தில் இருக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. அப்படியாயின் என்ன நடக்கும்?
பதில்: இன்று (நேற்று) மாலை சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிக்குமா? இல்லையா? என்பதை அரசாங்கத்திற்கு அறிவித்தவுடன் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
கேள்வி: எப்போது அமைச்சரவை மாற்றம் நடக்கும்?
பதில்: 14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நடக்கும்.
கேள்வி: புதிய அமைச்சரவை பதவியேற்குமா அல்லது அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமா?
பதில்: புதிய அமைச்சரவை பதவியேற்கும். குறிப்பாக விஞ்ஞான ரீதியில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன. பலரது அமைச்சுக்கள் மாறலாம். சிலரது அமைச்சுக்களுக்கன இலாகாக்கள் மாறலாம். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வருமா?
பதில் : அப்படியில்லை. அரசியலமைப்பின் படி அமைச்சர்களின் எண்ணிக்கை அமையும்.
கேள்வி: அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி என்ன கூறினார்?
பதில்: தேசிய அரசாங்கத்தின் நீடிப்பு தொடர்பில் தெ ளிவான தீர்மனத்தை எடுக்குமாறு கூறினார். குறிப்பாக தேசிய அரசாங்கம் தொடர வேண்டியது அவசியமாகும். தேசிய அரசாங்கம் இல்லாவிடின் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எவ்வாரெனினும் சுதந்திரக் கட்சியின் முடிவிலேயே தேசிய அரசாங்கத்தின் நீடிப்பு தங்கியிருக்கிறது.
கேள்வி: சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தது சரியா?
பதில்: அவர்கள் புறக்கணிக்கவில்லை. தீர்மானமொன்று எடுக்கும்வரை வராமல் இருந்தனர் அவ்வளவுதான்.
கேள்வி: பெப்ரவரி 10 தேர்தலின் பின்னரான நெருக்கடி, நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரான நெருக்கடி என்பவற்றால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். எப்போதுதான் நிலை சீரடையும்?
பதில்: தற்போது ஒரு தலைமை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் பயணிக்கவிருக்கிறோம். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து பயணிக்க தீர்மானித்திருக்கின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் தேசிய அரசாங்கம் என்ற யோசனையை முன்வைத்தார். அதனைத் தொடரவே நாங்கள் விரும்புகின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தியிந்தால். ஐ.தே.க. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும். அந்த நேரம் பஷில் ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ கால்டன் இல்லத்திற்கு சென்றுவிட்டார்.
எனவே ஐ.தே.க. வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதற்கு மாறாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும் இதன் அருமை சிலருக்கு தெரியவில்லை. அத்துடன் சர்வதேச ரீதியிலும் மனித உரிமை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்தோம். எனவே தேசிய அரசாங்கம் என்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. இரண்டு திசைகளில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றாக இணையும் போது பிரச்சினைகள் வருவது சகஜம் தான். நான் சந்திரக்காவின் அரசாங்கத்திற்கும் இந்த யோசனையை முன்வைத்திருந்தேன்.
கேள்வி: ரணிலை ஜனாதிபதியாக்குவோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததே?
பதில்: ரணிலை ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறலாம். ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன். இந்த நாட்டை முனனேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதற்காகவே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி: பிரதரை எதிர்த்த 16 பேரும் மீண்டும் வர விரும்பினால் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: அப்படியானால் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவேண்டும்.
கேள்வி: எவ்வாறு என்று கூற முடியுமா?
பதில்: அவர்கள் அது குறித்து கோரிக்கை விடுத்தால் பார்ப்போம்.
கேள்வி: நம்பிக்கையில்லாப் பிரேரணையினூடாக மஹிந்தவின் பலம் அதிகரித்துள்ளதா?
பதில்: இல்லை. அவர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைக் கூட வலுவற்றதாக்கி விட்டார்.
கேள்வி: மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாது போய்விட்டதா?
பதில்: அப்படியில்லை. எங்களிடம் 147 பேர் உள்ளனர். எனவே அவசரத்தின்போது ஜே.வி.பி. எமக்கு ஆதரவளிக்கும்.
கேள்வி: சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களும் விலகாவிடின் அவர்களை விலக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: அவ்வாறு தேவையில்லை என்று நம்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM