௨௦௨௦ இல் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்றும், அதற்காக அமெரிக்க குடியுரிமை யைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியி டுவது பற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா?
பதில்: இல்லை. ஆனால், பேசப்படுகிறது. அதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய- பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும்.
கேள்வி: தற்போதைய சூழ்நிலையில், அந்த வகிபாகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை விட, வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆதரவையும், பிரபலத்தையும், தற்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஆற்றலை யும் கொண்டுள்ளவர் அவர்; அனுபவம் மிக்கவர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால், துரதிர்ஷ்டவசமாக, அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. அவரது ஆதரவைப் பெற்ற எவரேனும் ஒருவரால் தான் வெற்றி பெற முடியும்.
கேள்வி: உங்களை வேட்பாளராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு, நீங்கள் தயாரா?
பதில்: அவர் அவ்வாறு நினைத்தால், நான் போட்டியிடுவேன். அதற்காக முன்வருவேன். போட்டியிடுவதற்கான ஆற்றல் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கேள்வி: அமெரிக்குடியுரிமையைக் கொண்டுள்ளதால், இரட்டைக் குடியுரிமை உங்களுக்குத் தடையாக இருக்கிறது. இதனை எப்படி தீர்க்கப் போகிறீர்கள்?
பதில்: 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் இப்போது என்னால் போட்டியிட முடியாது. இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரி மையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.
கேள்வி: அதற்கான செயல்முறைகள் என்ன?
பதில்: அது என்னைப் பொறுத்த விடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறை தான் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM