காதலியின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாகக் கூறி அந்த யுவதியை அச்சுறுத்தி அவளிடமிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் 21 வயது இளைஞனையும் அவனது தந்தையையும் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குரண பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் 45 வயதுடைய அவனது தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஒரே பிள்ளையான குறித்த 20வயது யுவதி நீர்கொழும்பு தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி பயின்று கொண்டிருந்த போது 21 வயதுடைய இளைஞனுடன் அவளுக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தேக நபரான இளைஞர் குறித்த யுவதியுடன் பல தடவைகள் பாலியல் உறவை மேற்கொண்டு வந்துள்ளதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அந்த காட்சிகளை சந்தேகநபர் தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்த யுவதியின் நிர்வாண படங்களை அந்த யுவதியிடம் காட்டி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்போவதாக பயமுறுத்தி சுமார் ஒரு வருட காலமாக அவ்வப்போது அவ்யுவதியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிலிருந்தே யுவதி ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பணத் தைப் பெற்று சந்தேகநபருக்கு வழங்கியுள்ளார். பின்னர் யுவதியின் தாய் வங்கிக் கணக்கைப் பரிசீலித்த போது அதில் பணம் இல்லாதிருந்ததை அவதானித்துள்ளார். அது தொடர்பில் யுவதியிடம் கேட்ட போது அனைத்து விடயங்களையும் யுவதி தெரிவித்துள்ளார். பின்னர் யுவதியின் தாய் இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரினால் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மறைப்பதற்காக சந்தேக நபரின் வற்புறுத்தலால் அவருக்கு பணம் வழங்கியதாகவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு சந்தேக நபரான இளைஞரின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற சந்தேகத்தில் அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM